முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் வைத்து பிள்ளையானை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிள்ளையானை அதிகாரிகள் கொழும்பிற்கு அழைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் எந்த சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.