அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104% சுங்க வரி விதித்ததற்குப் பதிலாக, சீனாவின் நிதியமைச்சு புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 84% வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
இதுவரை 34% இருந்த சுங்க வரி இப்போது 84% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வரிகள் வியாழக்கிழமை முதல் அமலில் வரும் என பீஜிங் தெரிவித்துள்ளது.
“வர்த்தக அநீதிக்கு எதிராக உலகம் ஒன்றாக ஒன்றுபட வேண்டும்” என சீனாவின் அரசு வழிநடத்தும் ‘சைனா டெய்லி’ பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.
இக்கட்டுரையில், சீனா ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளுடன் கூட்டிணைந்து செயல்படுவதை எடுத்துக்காட்டி, உலக நாடுகள் ஒன்றிணைந்து “வணிக அடிமைத்தனத்தை முறியடிக்கலாம்” என அழைப்பு விடுத்துள்ளது.
மற்றொரு கட்டுரை யூரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் சேர்ந்து சுதந்திர வர்த்தகத்தையும், பன்முகப்பாதுகாப்பு முறையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனக் கூறுகிறது.
சீன வெளிவிவகார அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி,
“இந்த வகை அதிக்கத்தனமான மற்றும் மிரட்டும் நடவடிக்கைகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது மற்றும் எப்போதும் ஏற்க முடியாது,” என்று அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் அறிவித்தார்.
இந்த புதிய வரிவிதிப்புகள், ஏற்கனவே மந்தமாக உள்ள சீனாவின் பொருளாதார நிலைக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளன.
“இது எங்களின் ஏற்கனவே குறைந்த இலாபத்தை மேலும் சுருக்குகிறது,” என இலத்திரனியல் வர்த்தகம், கப்பல் மற்றும் காற்று போக்குவரத்து துறையில் செயல்படும் ஒரு சீன நிறுவன உரிமையாளர் கூறியுள்ளார்.
சுங்க வரி அதிகரிப்பதால் நாங்கள் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்யும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விற்பனையாளர்கள் அனைவரும் கூடுதல் செலவுகளைச் சந்திக்க வேண்டும். இதில் அனைவருக்கும் லாபம் குறைகிறது,” என்று அவர் கவலையுடன் கூறியுள்ளார்.