உலகளாவிய வர்த்தக கொள்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சில நாட்களுக்கு முன் வலியுறுத்தினார்.
ஆனால், தற்போது அவர் அறிவித்துள்ள 90 நாள் “வரிவிதிப்பு இடைவேளை” அந்த முயற்சிக்கு தற்காலிக நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அறிவித்த வரிகள் மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரிகள் அமல்படுத்துவதில் முழுமையாக நிலைத்திருக்கிறோம் என டிரம்ப் மற்றும் அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
டிரம்ப் 90 நாள் இடைவேளை பற்றி யோசிக்கிறார் – என்ற தகவலை அமெரிக்க உள்துறை நிராகரித்தனர். ஆனால் அந்த செய்தி பங்குச் சந்தையில் சிறிய ஏற்றத்தை ஏற்படுத்தியது.
இதுவரை 75க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை தொடர்பு கொண்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.
உலகமே இன்று அமெரிக்காவை தேடுகிறது” என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலைன் லெவிட்ட், குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் தனது சமூக ஊடக தளமாக ட்ரூத் சோசல் Truth Social தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், EU, மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகள் இடைவேளையிலிருந்து விலக்கப்பட்டதா அல்லது உள்வாங்கப்பட்டதா என்பது தெளிவாகக் கூறப்படவில்லை.
சீனாவுக்கு எதிராக 125% வரிவிதி விதித்து டிரம்ப் தமது கடுமையான அணுகுமுறையை வலியுறுத்தினார். இது உலகளாவிய பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும், ஆனால் அமெரிக்க வெளியுறவு கொள்கையில் உள்ள அண்மைய நிலைப்பாடுகளை பிரதிபலிக்கிறது.
இந்த இடைவேளை முடிந்ததும், தற்போதைய குழப்ப நிலை மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.