19.6 C
Switzerland
Monday, May 19, 2025

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பில்லை – கம்மன்பில

Must Read

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு கிடையாது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுடன் இணைந்து பல்வேறு நகரங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என கருத்தரங்குகளை நடத்தியவர்கள் இன்று அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும் போது என்ன காரணத்தினால் கைது செய்யப்படுகின்றார் என்பது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் சட்டத்தரணி என்ற அடிப்படையில் பிள்ளையானை சந்தித்தபோது நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அருகாமையில் இருந்து தான் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தனர் எனவும் இது சட்ட ரீதியானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக சட்டத்தரணி ஒருவர் தனது சேவை பெறுநறுடன் நடத்தும் சந்திப்புக்களை ரகசியமாக பேண வேண்டியது சட்டத் தேவை என்ற போதிலும் இலங்கை பொலிசார் அதற்கு இடமளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தாம் இலங்கை போலீஸ் திணைக்களம் பாரியளவில் அரசியல் மையப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் ஒழுக்கம் மிக மோசமடைந்துள்ளது என அவர் வருத்தம் வெளியேற்றுள்ளார் தான் பிள்ளையானை சந்தித்துக் கொண்டிருக்கும்போது குற்ற விசாரணை பிரிவின் அதிகாரியான பாயிம் என்ற நபர் தாம் பிள்ளையானை சந்திப்பது குறித்து தனது சொந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி முகநூலில் பதிவு ஒன்றை இட்டார் எனவும் இவ்வாறான ஒரு சம்பவம் இதற்கு முன்னர் பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெற்றதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை கொண்டு தாக்குதல் ஜனாதிபதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் பிரதான சூத்திரதாரி ஒருவரை ஜனாதிபதி தற்போது தயாரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஓர் தேசிய வீரர் என முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

அண்மையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை அண்மையில் நேரில் சந்தித்து கலந்துரையாடிய கம்மன்பில இன்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேசப்பற்றுள்ள ஓர் தேசிய வீரராக பிள்ளையானை போற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது சமூக ஊடகங்களில் செய்தி எழுதும் பல்வேறு இளம் தலைமுறைக்கு பிள்ளையான் யார் என்பது தெரியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியின் ஆரம்பமே கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோர் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து விலகியமை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

14 வயதில் பலவந்தமாக சிறுவர் போராளியாக பிள்ளையான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர் எனவும் சிறுவர் போராளிகள் புலிகள் அமைப்பில் இருந்தனர் என்பதை பறைசாற்றக்கூடிய உயிருடன் இருக்கும் ஓர் ஆதாரமாக பிள்ளையானை நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து பிளவடைந்து ராணுவத்தில் இணைந்து யுத்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES