சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 2055ஆம் ஆண்டுக்குள் 10.5 மில்லியனாக அதிகரிக்கும் என மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட புதிய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியின் பிரதான காரணம் குடிபெயர்ச்சி என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2035ஆம் ஆண்டு முதல் இயற்கையான மக்கள் வளர்ச்சி — பிறப்புகளும் இறப்புகளும் இடையிலான வித்தியாசம் — எதிர்மறையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தொகை முற்றிலும் குடிபெயர்ச்சியின் மூலம் மட்டுமே அதிகரிக்கும் நிலைக்கு செல்லும் எனவும், நாட்டின் பொருளாதார நிலைமையின் மீது இது மிகுந்த தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“உயர்” மற்றும் “குறைந்த” என இரண்டு மாற்று கணிப்புகளையும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது:
உயர்கணிப்பில் 2055-ல் மக்கள் தொகை 11.7 மில்லியனாக இருக்கும் என்றும், குறைந்த கணிப்பில் 9.3 மில்லியனாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் தொகை முதிர்ச்சி வேகமாக 2040 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 முதல் 2055 வரை 65 வயதுக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 50% அதிகரிக்கும். குறிப்பாக 2029 ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் அதிகரிப்பு 2.6% என்ற உச்சத்தை அடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்விஸ் மக்கள் கட்சி “10 மில்லியன் சுவிஸ்க்காரர் இல்லை!” என்ற உத்தியோகபூர்வ முன்முயற்சியை தொடங்கியுள்ளது. இதன் நோக்கம் 2050க்குள் மக்கள் தொகை 10 மில்லியனை தாண்டுவதை தடுப்பதாகும்.