உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் விசாரணைகள் குறித்து முக்கிய விபரங்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதிமொழி வழங்கி இருந்தார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி கிழக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பதை அம்பலப்படுத்தப் போவதாக ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியிருந்தார்.
இந்த உறுதிமொழி தொடர்பில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தனது வரவேற்பினை வெளியிட்டு இருந்தார்.
இந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அண்மையில் அமெரிக்க புலனாய்வு பிரிவான எஸ்பிஐ அதிகாரிகள் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தனர்.
இந்த அறிக்கையில் குறித்த தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு முக்கியமான விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த தாக்குதலை திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் முழு விபரங்களையும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையில் இந்த தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் செயற்பட்டு இருந்தமை தொடர்பிலும் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த தாக்குதல் இடம் பெற்றதாகவும் இந்த தாக்குதலுக்கான பொருட்களை கொள்வனவு முதல் வெடி பொருட்கள் கொள்வனவு வரையிலான தகவல்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் பற்றிய விவரங்கள் அவர்கள் பயிற்சி பெற்ற விதம் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் அவர்கள் பேணிய தொடர்பு போன்ற விபரங்கள் இந்த அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருந்த பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்புகள் அல்லது நாடுகள் என்பன பற்றிய விபரங்கள் எதுவும் எஸ்பிஐ வெளியிடவில்லை.
அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவரின் கடத்தல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிள்ளைகளை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பத்துடனும் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிங்கள பௌத்த தேசிய கடுப் போக்குவாத கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிவித்துர ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில, சட்டத்தரணி என்ற ரீதியில் பிள்ளையானை சிறையில் சென்று சந்தித்திருந்தார்.
பிள்ளையார் தம்மிடம் பல்வேறு விபரங்களை கூறியதாக உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளுமாறு அதிகாரிகள் தம்மை பலவந்தப்படுத்துவதாக பிள்ளையான் கூறியதாஉதயகம்மன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் முன்னால் ஜனாதிபதி ரன்னில் விக்ரமசிங்கவும் பிள்ளையானை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானை தொடர்பு கொண்டு பேசுவதற்கு ரணில் விக்ரம்சிங்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கை அரசியலில் மிக முக்கியமான ஒரு சம்பவமாக கருதப்படும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மையான தகவல்கள் வெளியிடப்படுமா இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சஹ்ரான் ஹாசிம் என்பவரினால் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது எனவும், தாக்குதலின் பின்னர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இலங்கையில் இந்த தாக்குதல் அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டது என பரவலாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் இந்த தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான ஓர் பின்னணியில் எஸ்பிஐ அறிக்கை, பிள்ளையான் கைது போன்ற பல்வேறு சம்பவங்களும் ஜனாதிபதி அனுரகுமாரவின் உறுதிமொழியும் கவனிக்கத்தக்க விடயங்களாக கருதப்பட வேண்டியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தக்கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும் பிரதான சந்தேக நபர்கள் தண்டிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் கேள்விக்குறியாக அமைந்துள்ளது எனவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.