ரஸ்யா, ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் என சுவிட்சர்லாந்து மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து, போரின் விரிவடையும் அபாயத்திற்கு எதிராக ஐரோப்பா முழுவதும் பாதுகாப்பு திட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதேபோல், ரஷ்யா மற்ற ஐரோப்பிய நாடுகளின்மீது தாக்குதல் நடத்தும் சாத்தியக் கூறுகள் சுவிட்சர்லாந்திலும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையை உருவாக்கியுள்ளது.
லீவாஸ் Leewas நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் இதனை உறுதி செய்கின்றன.
கணிப்பின்படி, சுவிட்சர்லாந்தில் கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 66% பேர், ரஷ்யா அடுத்த 10 ஆண்டுகளில் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்மீது தாக்குதல் நடத்தும் என நம்புகிறார்கள்.
அதில், சிலர் “மிகவும் நம்புகிறேன்” எனவும், சிலர் “ஏற்கனவே தாக்கும் வாய்ப்பு இருக்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கேதிராக, 18% பேர் மட்டுமே இது நடக்காது என நினைப்பதாகவும், 12% பேர் அதனை முற்றிலும் நிராகரித்துள்ளனர்.
இந்த முடிவுகளில் கட்சிசார்ந்த கருத்து வேறுபாடுகள் தெளிவாக தெரிய வந்தன. மத்திய இடதுசாரி மற்றும் பசுமை கட்சி ஆதரவாளர்கள், ரஷ்யா மற்ற நாடுகளுக்கு தாக்குதல் நடத்தும் அபாயம் மிக அதிகம் என நம்புகின்றனர்.
மற்றபடி, வலதுசாரி SVP கட்சி ஆதரவாளர்கள் 50:50 என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அதாவது பாதி பேர் தாக்குதல் நடக்கும் என நம்ப, மற்ற பாதி அது நடக்காது என நம்புகின்றனர். மேலும், SVP வாக்காளர்களில் ஒரு கால்பகுதி (25%) முற்றிலும் தாக்குதல் நடக்காது என உறுதியாக நம்புகின்றனர்.
ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக பயம் அதிகரித்து வருகிற போதிலும், 70% பேர் தங்களுக்கே நேரடியாக அச்சம் இல்லை அல்லது மிகக் குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளனர்.