7.9 C
Switzerland
Friday, May 23, 2025

ட்ரம்ப்பின் நடடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்யும் மத்திய வங்கி ஆளுனர்

Must Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த வர்த்தக வரி மாற்றங்கள் மற்றும் வரி உயர்வுகள், நவீன கால வரலாற்றில் இல்லாத வகையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அனுபவிக்காத புதிய சூழ்நிலையில் தள்ளிவிட்டுள்ளன என்று அதன் தலைவர் ஜெரோம் பவெல் தெரிவித்தார்.

“இவை மிகவும் அடிப்படையான, வழக்கத்துக்கு மாறான கொள்கை மாற்றங்கள்,” என்று பவெல், சிகாகோவில் நடைபெற்ற பொருளாதார சங்க நிகழ்வில் உரையாற்றும் போது கூறினார்.

இதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்து நவீன காலத்தில் எந்த அனுபவமும் கிடையாது என அவர் தெரிவித்தார்.

ட்ரம்ப் அறிவித்த வரி உயர்வுகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உள்ளதாகவும், இந்த வரி சந்தேகங்கள் நீடிப்பதால், அமெரிக்க பொருளாதாரத்தில் நீடித்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பவெல் எச்சரித்தார்.

வரிகள் காரணமாக அமெரிக்கா தாழ்ந்த வளர்ச்சி, அதிக வேலைவாய்ப்பு இழப்பு மற்றும் வேகமான பணவீக்கம் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் சந்திக்கவிருக்கிறது, இது கடந்த 50 வருடங்களாக மத்திய வங்கி எதிர்கொள்ளாத ஒரு பெரும் சவாலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

“எங்கள் இரட்டை நோக்குகளும் (வேலைவாய்ப்பையும் பணவீக்கத்தையும் சமநிலைப்படுத்துவது) ஒரே நேரத்தில் முரணாக மோதும் சிக்கலான சூழ்நிலையில் நாங்கள் சிக்கலாம்,” என பவெல் தெரிவித்தார்.

பவெல் உரையாற்றும் வேளையில் அமெரிக்க பங்கு சந்தை கடுமையாக சரிந்தது. டாவ் ஜோன்ஸ் குறியீடு 700 புள்ளிகள் (1.7%) சரிந்தது. S&P 500 குறியீடு 2.5% குறைந்தது. தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பங்கு பெற்றுள்ள Nasdaq குறியீடு 3.5% வீழ்ந்தது.

ட்ரம்பின் வரி உயர்வுகள், மத்திய வங்கியின் பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் முயற்சிகளைப் பாதிக்கக்கூடியவை. அதே சமயம், தற்போதைய பொருளாதார தரவுகள் அமெரிக்காவின் தற்போதைய நிலை மோசமாக இல்லை என்பதையும் காட்டுகிறது.

ட்ரம்ப் தனது வரி நடவடிக்கைகளால் வெளிநாடுகளே செலுத்தும் என சுட்டிக்காட்டி வந்தாலும், உண்மையில் அதன் சுமையை அமெரிக்காவின் பொதுமக்களே ஏற்க நேரிடும் என்றும் பவெல் எச்சரித்தார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES