உக்ரைன்-ரஷ்யா இடையிலான சமாதான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால், அமெரிக்கா இந்த முயற்சியில் இருந்து விலகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமாதானம் விரைவாக வரவேண்டும். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாட்களில் முடிவாகும் என நான் எதிர்பார்க்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாவிட்டால், எங்களுக்கு கரிசனை காட்ட இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன. காலத்தை வீணடிக்க முடியாது” என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலைமையில், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் தொடர்ந்துவரும் சூழலில், கார்கிவ் மற்றும் சுமியில் ரஷ்ய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.
2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் மெதுவாக முன்னேற்றம் காட்டி வருகின்றன.
சமாதான உடன்படிக்கைக்காக, ரஷ்ய அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து உள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தையின் எளிமையை பற்றி பேசும் போது, “இருபுறமும் ஒருவரை ஒருவர் முட்டிக் கொண்டு, பேச்சுவார்த்தையை கடினமாக்கினால், நாம் இந்த முயற்சியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவாகும்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, உக்ரைன் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கனிம ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்து வருகிறது. இரு நாடுகளும் உக்ரைன் மறுசீரமைப்புக்காக முதலீட்டு நிதி அமைப்பை உருவாக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம், உக்ரைனின் எண்ணெய், எரிவாயு மற்றும் மின்னழுத்த கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக அமைதி வழிகளில் முக்கிய பாத்திரம் வகிக்கும் அமெரிக்காவின் இந்த முடிவு, உக்ரைன் போர் முடிவுக்கான சர்வதேச எதிர்பார்ப்பை மீண்டும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.