உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்த ‘ஈஸ்டர் போர் நிறுத்த’ அறிவிப்புக்குப் பின்னரும், உக்ரைனில் பல இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு ஆரம்ப 6 மணி நேரத்துக்குள், ரஷ்ய படை 387 தாக்குதல்களையும், 19 நேரடி மோதல்களையும் நடத்தியதாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
மேலும், 290 முறைகள் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“புதிய போராட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்துவது போல ரஷ்யா உலகத்திற்கு ‘சமாதான’ மாதிரியான ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது,” என்றும், “உண்மையில், பல இடங்களில் தாக்குதல் முயற்சிகளை நின்றுவைக்கவில்லை” என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிரியின் செயல்பாடுகளுக்கேற்ப, எங்கு எங்கு தாக்குதல் வந்ததோ அங்கு அங்கே எங்கள் படைகள் உரிய பதிலடி அளித்து வருகின்றனர்,” என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன், புதினின் 30 மணி நேர இடைவேளை அறிவிப்புக்குப் பதிலாக, 30 நாட்கள் முழுமையான தாக்குதல் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என முன்பே முன்மொழிந்தது. இது பற்றிய பதிலை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
ரஷிய அதிபர் புதின் தனது தலைமையகக் கண்காணிப்பு கூட்டத்தில், “மனிதாபிமான காரணங்களுக்காக ஈஸ்டர் போர் நிறுத்தத்தை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து ரஷிய படைகளும் போர்முனை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்,” என உத்தரவிட்டார்.
இடைவேளை இருபுறம் மதிக்கப்பட வேண்டும்’ — ரஷிய துறை:
ரஷிய பாதுகாப்புத் துறை, இந்த இடைவேளை உக்ரைன் மத்தியிலும் மதிக்கப்படுமானால் தான் தங்களும் கடைபிடிப்போம் என தெரிவித்தது.