அமெரிக்காவின் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களில் பெரும் மாற்றங்களை செய்யும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சோமாலியா மற்றும் ஈராக் போன்ற முக்கிய பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக பணிச்சூழலை குறைக்கும் பரிந்துரையும், பிற நாடுகளில் உள்ள தூதரகங்களை “புதுவிதமாக மதிப்பீடு செய்து” மறுசீரமைக்கும் யோசனைகளும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் எலோன் மஸ்க் ஆதரவுடன் இயங்கும் “அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறை” (Department of Government Efficiency) பரிந்துரை செய்திருக்கும் அரசாங்க ஒட்டுமொத்த செலவைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் அமைகிறது.
இதுவரை, இந்த தூதரகங்களை மூடுவதற்கான முடிவில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஒப்புதல் அளித்தாரா என்பது தெளிவாகவில்லை.
இந்த ஆவணத்தின் படி, 10 தூதரகங்களும், 17 துணை தூதரகங்களும் மூட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ளவையாகும்; அதேவேளை ஆசியா மற்றும் கரீபியன் நாடுகள் சிலவும் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
- மால்டா
- லிக்சம்பர்க்
- லெசோத்தோ
- காங்கோ குடியரசு
- மத்திய ஆப்பிரிக்க குடியரசு
- தென் சூடான்
- பிரான்ஸில் 5 துணை தூதரகங்கள்
- ஜெர்மனியில் 2
- போஸ்னியா & ஹெர்ஸெகோவினாவில் 2
- இங்கிலாந்தில் 1
- தென் ஆப்பிரிக்காவில் 1
- தென் கொரியாவில் 1
உள்ளிட்ட தூதுரகங்கள், துணைத் தூதரகங்கள் மூடப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
மூடப்படும் தூதரகங்களின் பணிகளை அருகிலுள்ள நாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் டாமி ப்ரூஸ், இந்த ஆவண குறித்தும், மாநில துறையின் வேலைத்திட்டங்களைப் பற்றியும் எந்தவிதமான உறுதிப்படுத்தலையும் வழங்க மறுத்துள்ளார்.