சீனாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதை கட்டுப்படுத்துமாறு அமெரிக்கா அழுத்தம் செலுத்தும் சூழலில், அதற்காக தற்காலிக சலுகைகளை எதிர்பார்த்து குறுக்குவழி முயற்சிகளைச் செய்ய வேண்டாம் என்று தனது வர்த்தக கூட்டாளர்களை சீனா கடுமையாக எச்சரித்துள்ளது.
சீனாவின் பொருளாதாரத்தை தனிமைப்படுத்துவதற்காக சுங்க வரி பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்:
அமைதி என்பது அடிமைத்தனத்தால் கிடைக்காது; வரம்பற்ற ஒப்புதலால் மதிப்பும் கிடையாது. மற்றவர்களின் நலன்களை தன்னலமாக வியாபாரப் புரிதலுக்காக தியாகம் செய்வது — அதற்குப் பதிலாக சிறிது சலுகை பெறும் எண்ணம் — புலியிடம் அதன் தோலை கேட்பதற்கு சமமானது. இறுதியில், இதன் விளைவு தானும் பத்து பேரும் சேதப்படுவதுதான் என குறிப்பிட்டார்.
சீனாவின் நலன்களை பாதிக்கும் விதமாக எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படுவதை சீனா தடுக்க உறுதி செய்கிறது. இது போன்ற சூழ்நிலை உருவானால், சீனா அதனை ஏற்காது; அதற்கெதிராக சமமான பதிலடி நடவடிக்கைகளை எடுத்துவிடும்.”
ஏப்ரல் 9 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெரும்பாலான நாடுகளின் மீது விதித்திருந்த “பழிவாங்கும்” சுங்கக் கட்டணங்களை 90 நாட்களுக்கு இடைநிறுத்தினார். ஆனால் சீனாவுக்கு எதிரான கட்டணங்களை பெரிதும் அதிகரித்தார் — தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது சுங்கக் கட்டணம் 145% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளர்களை சீனாவுடனான வணிக உறவுகளை குறைக்கும் வகையில் அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக வால்ட்ரீட் ஜர்னல் கடந்த வாரம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டது.
இந்த முயற்சியின் மூலம், சீன பொருளாதாரத்தை தனிமைப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தனது கூட்டாளிகளிடம் சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதாவது:
- சீனாவின் பொருட்கள் தங்கள் நாட்டின் வழியாக அனுப்பப்படுவதை தடுக்கும்,
- சீன நிறுவனங்கள் தங்கள் நாட்டில் நிறுவனம் தொடங்குவதை தடுக்கும்,
- சீனாவின் குறைந்த விலை தொழில்துறை பொருட்களை தங்கள் உள்நாட்டு சந்தையில் ஏற்காமல் இருப்பது.
இந்தப் போக்குகள் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் அதிர்வலை உருவாக்கும் நிலையில், சீனாவின் உறுதி மொழி உலக கவனத்தை ஈர்த்துள்ளது.