19.6 C
Switzerland
Monday, May 19, 2025

ஜனாதிபதி இன்று முக்கிய அறிக்கையை வெளியிடுவார்!

Must Read

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி இன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும், அதற்காக மக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து உண்மைத் தகவல்கள் மற்றும் இதற்குப் பின்னால் இருந்தவர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்கும் என்ங வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

இந்த தாக்குதலை சஹ்ரான் மேற்கொண்டதாகவும், சஹ்ரானுக்கு ஆதரவளித்தவர்கள் மற்றும் அவரது திட்டத்தை நடாத்த உதவியவர்கள் நாட்டில் இருப்பது இப்போது அனைவருக்கும் தெரிந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சஹ்ரானுக்கு அரசியல், நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கியவர்கள் குறித்து அரசு ஆட்சிக்கு வந்தபோது உடனடியாக தகவல் வெளியிடுவதாக உறுதியளித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சில வாரங்களுக்கு முன்பு, ஏப்ரல் 21ஆம் திகதி இதுபற்றிய அறிக்கையை வெளியிடுவதாக அறிவித்தார். அந்த அறிக்கையை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம்,” என முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே, பல சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்த தாக்குதல் தொடர்பாக பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அரசுக்கு பல கேள்விகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது — சாரா ஜஸ்மின் என்ற பெண், சஹ்ரானின் அணிக்குள் முக்கிய பங்கு வகித்தவராகவும், தாக்குதலின் போது உயிர் பிழைத்தவராகவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

எனினும், அரசாங்கத்தின் சில அமைச்சர், இவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என கூறி வந்தனர். அண்மைக் காலங்களில் இந்திய அரசுடன் நெருக்கமாகவே இலங்கை அரசு வேலை செய்தது. மோடி அரசின் பாதுகாப்பு செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்தார். எனவே, சாரா ஜஸ்மின் இந்தியாவில் உள்ளாரா என்பது குறித்து அரசாங்கம் இந்திய அரசிடம் கேட்டதா என்பதே எங்கள் கேள்வியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2019 ஏப்ரல் 20ஆம் திகதி இரவு Shangri-La ஹோட்டலில் சஹ்ரானும், ஹில்ஹாமும் தங்கியிருந்தனர். தாக்குதலின் முந்தைய இரவு, அந்த அறையில் ஏற்கனவே வேறு குழுவினர் தங்கியிருந்ததாக ஹோட்டல் நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதை அரசு விசாரணை செய்ததா? மேலும், சஹ்ரானின் அறைக்கு 3-4 அறைகள் தள்ளி அமைந்திருந்த 623 என்ற அறையில் தங்கியிருந்தவர்கள் தாக்குதல் முடிந்ததும் காணாமல் போயினர். அந்த நபர்கள் யார்? அவர்கள் இலங்கையர்களா, வெளிநாட்டவர்களா? இவ்வகையான கேள்விகளுக்கு அரசாங்கம் தெளிவான பதில் அளிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES