கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பாண்டவர் பிரான்சிஸின் மறைவிற்கு சுவிட்சர்லாந்து இரங்கல் வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் திங்களன்று கத்தோலிக்க உலகம் ஏமாற்றத்துடன் பெரும் துயரத்தை எதிர்கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி கரின் கெலர்-சுட்டர், X (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் தனது ஆழ்ந்த கவலையையும் மரியாதையையும் வெளியிட்டார். “அவர் ஒரு சிறந்த ஆன்மீக தலைவர், அவரது மனித நேயம் கத்தோலிக்கர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பலருக்கும் ஆறுதல் அளித்தது” என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் St. Gallen ஆயர் மார்கஸ் புஸ்செல் தனது ஆழ்ந்த துக்கத்தைப் பதிவு செய்தார். “சிறியவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கிய உண்மையான மனிதரை இழந்துள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாப்பாண்டவர் ஏழைகளுக்கான அக்கறையும், 2013ஆம் ஆண்டு லம்படூசாவில் அகதிகளை நேரில் சந்தித்த நிகழ்வும் அவரின் கருணைபூர்வமான தலைமையை வெளிப்படுத்திய நிகழ்வாகவும், அவர் நினைவு கூறினார்.
பாப்பாண்டவரின் மறைவையொட்டி, ரிக்கினோ கான்டனில் உள்ள லுகானோ மறைமாவட்டத்தில் திங்கட்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அனைத்து தேவாலய மணி ஓசைகளை ஒலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே நாளின் மாலை, சிறப்பு பிரார்த்தனை விழா மற்றும் திருப்பலி நடைபெறவுள்ளது.
போப் பிரான்சிஸ் தனது வாழ்நாளில் எளிமையான மனிதரின் உருவத்தையும், திறந்த மனப்பான்மையையும் உலகிற்கு விட்டுச்சென்றதாக அவரை நினைவுகூரும் உரைகளில் கூறப்பட்டுள்ளது.