9 C
Switzerland
Wednesday, May 21, 2025

பாப்பாண்டவரின் மரணத்திற்கான காரணம் வெளியானது

Must Read

பாப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

வாடிகன் நகரில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், உலகின் முதல் லத்தீன் அமெரிக்க பாப்பாண்டவருமான பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார்.

மரண சான்றிதழின்படி, போப் பிரான்சிஸ் அவர்கள் “மூளையில் ஏற்பட்ட பக்கவாதம், கோமா, மீளமுடியாத இதய செயலிழப்பு” காரணமாக உயிரிழந்தார் என வத்திகான் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரேஆ ஆர்காஞ்செலி தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் உள்ள சாண்டா மார்த்தா குடியிருப்பில் தனது குடியிருப்பில் அவர் காலமானார்.

மரணத்திற்கு ஒரு நாளுக்கு முன்னர், அவரது இறுதி பொதுவான நிகழ்வாக, புனித பீட்டர் திருச்சந்தில் (St. Peter’s Square) ஆயிரக்கணக்கான ஈஸ்டர் பக்தர்களுக்கு வாகனத்தில் அமர்ந்தபடி நல்வாழ்த்து உரை வழங்கியிருந்தார்.

அவரது 12 ஆண்டு பாப்பாண்டவராக கடமையாற்றிய காலத்தில் பாப்பாண்டவருக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் இருந்தபோதிலும், அண்மையில் இரட்டை நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 38 நாட்கள் ரோம் ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

மரண சான்றிதழில் மேலும், arterial hypertension (அழுத்தமான இரத்த அழுத்தம்), multiple bronchiectasis (பல்வேறு புடைநோய்) மற்றும் வகை 2 நீரிழிவு நோய் (Diabetes Type 2) ஆகியவை அவருக்கு இருந்ததாகவும், இதற்கான தகவல் இதுவரை பொதுவாக அறிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வத்திக்கான்  திங்கள்கிழமை மாலை புனித பீட்டர் திருச்சந்தில் ரோசரி ஜெப நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வை கார்டினல் மவுரோ கம்பெட்டி வழிநடத்தினார்.

போப் பிரான்சிஸ் தனது இறுதி விருப்பங்களை 2022 ஜூன் 29ஆம் தேதி எழுதிய ஒரு ஆவணத்தில், “வத்திக்கானில்  உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் அல்ல, ரோம் நகரில் உள்ள புனித மரியாள் மேஜர் பசிலிக்காவில், எளிமையான முறையில், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல் புதைக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் செயல்முறை

போப்பின் மறைவுக்குப் பிறகு, “Novendiale” எனப்படும் 9 நாட்கள் துக்க அனுசரணை நடைபெறுகிறது.

இதற்குப் பிறகு, 80 வயதுக்குட்பட்ட கார்டினல்கள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சாபலில் கூடி, மறைந்த போப்புக்கு மாற்று தேர்வு செய்ய உள்ளனர். ரகசிய வாக்கெடுப்பின் மூலம் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதும், சாபல் மீது அமைந்துள்ள புகை குழாயிலிருந்து வெள்ளை புகை வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES