19.6 C
Switzerland
Monday, May 19, 2025

ஐந்து ஆண்டுகளில் கள்வர்களை பிடிப்போம் – அரசாங்கம்

Must Read

ஐந்து ஆண்டு காலப் பகுதியில் கள்வர்களை பிடிப்போம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் சொத்துக்களை களவாடியவர்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டு காலத்திற்குள் கள்வர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அஹட்டுவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகள் களவு என்பனவற்றை நாம் அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல மாட்டோம் என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கள்வர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES