சீனாவுடன் நடந்து வரும் வர்த்தக போர் தொடர்பில் திடீர் திருப்பம் அளிக்கும் வகையில், அதிகரிக்கப்பட்ட சுங்க வரிகள் வெகுவாக குறைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெரிவித்தள்ளார்.
எனினும், ஆனால் அவை “பூஜ்யம் (0%) ஆகாது” என்றும் அவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப், சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 145% சுங்க வரி குறைவடையும் என குறிப்பிட்டுள்ளார்.
“145% என்பது மிகவும் அதிகம், அது இவ்வளவு அதிகமாக இருக்காது. அது மிகவும் குறையப் போகிறது. ஆனால் பூஜ்யமாக இருக்காது” என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சீனாவும் பதிலடி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய அமெரிக்க நிறுவனங்களை “நம்பமுடியாத நிறுவனங்கள்” பட்டியலில் சேர்த்தல், முக்கிய கனிமங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தல் ஆகிய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஹாலிவுட் திரைப்படங்களின் எண்ணிக்கையை சீனாவில் குறைத்ததும், Boeing நிறுவனத்தின் விமானங்களை மீண்டும் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில், டிரம்ப், “நாங்கள் மிகவும் நன்றாக நடந்து கொள்வோம். அவர்கள் (சீனா) நன்றாக நடந்து கொள்வார்கள். நமக்கிடையே ஒத்துழைப்பு ஏற்படும். இது நன்றாக முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சீனாவின் தரப்பிலிருந்து, பேச்சுவார்த்தைக்கு வாயில் திறந்திருப்பதாக இருந்தாலும், அது சமவெளியில் மற்றும் மரியாதையை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் உலக நாடுகளின் வர்த்தக நிலவரங்களை பாதிக்கும் அளவுக்கு இந்த அமெரிக்கா-சீனா மோதல், உலக சந்தைகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இருநாடுகளும் சமரசத்துக்கு தயாராக இருப்பது பங்குச் சந்தைகளில் சிறு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.