சுவிட்சர்லாந்து ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர், பாப்பாண்டவர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கெல்லர்-சுட்டர், சுவிட்சர்லாந்தின் பிரதிநிதியாக பங்கேற்க இருப்பதாக X (முன்னைய Twitter) சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
“நான் ரோம் நோக்கி பயணித்து, பாப்பாண்டவர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் ஸ்விட்சர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்தப் போகின்றேன்” என அவர் X-இல் எழுதியுள்ளார்.
இந்த இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு, புனித பேதுரு பேராலய முன்பாக நடைபெறவுள்ளதாக வத்திக்கான் தகவல் வெளியிட்டுள்ளது.