சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில் பெண் ஒருரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மீதொட்டுமுல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் டேன் பிரியசாத் கொல்லப்பட்டிருந்தார்.
மோட்டார் சைக்களில் சென்ற துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாககிச் சூட்டை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இந்த தாக்குதலுக்கான காரணங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.