அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பிலான பேச்சுவார்த்தை சாதக நிலையில் காணப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட 44 வீத சுங்க வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காக விஜயம் செய்துள்ளது.
இந்த பிரதிநிதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதக நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க இலங்கை தரப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் களவாடவில்லை என்றாலும் களவெடுத்தவர்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள் என சிலர் எம்மிடம் கேட்கிறார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகள் எங்கு தேங்கிக் கிடக்கின்றன என்பது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் பலருக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கை பேண வேண்டுமென மக்கள் கருதுவதாக இந்த அரசாங்கம் அதனை திறம்பட செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.