உக்ரைனின் மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களுக்காக ரஷ்யாவை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன.
இத்தாக்குதல்கள் அமைதிக்கான முயற்சியல்ல என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் தலைவி காயா காலாஸ் தெரிவித்தார்.
உண்மையான தடையே உக்ரைன் அல்ல. அது ரஷ்யா – அதன் போர் நோக்கங்கள் இன்னும் மாறவில்லை,” என்று அவர் X (முன்னர் Twitter) தளத்தில் கூறினார்.
அயர்லாந்து பிரதமர் மைக்கல் மார்டின், பொதுமக்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை நிறுத்த வேண்டும் எனக் கூறியதுடன், “உக்ரைனில் நீதியும் நீடித்த அமைதியும் உருவாக வேண்டிய காலம் வந்துவிட்டது” என வலியுறுத்தினார்.
“ரஷ்ய அதிபர் புடின் செய்வது, அவர் செய்யவேண்டியதற்கு எதிரானது” என நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ரூபென் பிரெகல்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆக்கிரமிப்பாளரைத் தடுக்க அதிக உதவிகளும், இராணுவ ஆதாரமும் தேவை” என தெரிவித்தார்.
“உக்ரைனில் கடந்த இரவு ஒரு பயங்கர இரவு. மோஸ்கோவுக்கு ‘அமைதி’ என்பது – மரணம் மற்றும் அழிவை மட்டுமே குறிக்கிறது” என எஸ்டோனிய வெளியுறவுத்துறை அமைச்சர் மார்குஸ் சாத்க்னா கூறியுள்ளார்.