ரஷ்யா கடந்த 9 மாதங்களில் உக்ரைன் தலைநகரான கீவ் மீது மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“விளாடிமீர், நிறுத்த வேண்டும்!” என்று ரஷ்ய அதிபர் புடினுக்கு நேரடியாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீவிரமான இந்த தாக்குதலில் ரஷ்யா 70 ஏவுகணைகள் மற்றும் 145 டிரோன்களை கீவ் நோக்கி அனுப்பி, பொதுமக்கள் குடியிருப்புகள் உட்பட 13 இடங்களை சேதப்படுத்தியது.
குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாகவும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் என்றும் உக்ரைனின் அவசர சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில், 9 பேர் உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“இது தேவையற்ற தாக்குதல், மிகவும் தவறான நேரத்தில் நிகழ்ந்தது,” என ட்ரம்ப் தன் Truth Social பக்கத்தில் பதிவு செய்தார். “வாரத்திற்கு 5000 வீரர்கள் உயிரிழக்கின்றனர். அமைதி ஒப்பந்தத்தை உடனடியாக முடிப்போம்!”
தென்னாப்பிரிக்காவில் உள்ளபோது, இந்த தாக்குதல் அமெரிக்காவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டதாக உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 21 வயதுடைய இளைஞர் மற்றும் அவருடைய 19 வயதுடைய சகோதரி உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். நகர மேயர் விட்டாலி கிளிட்ஸ்கோ, பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ரஷ்யா, இந்த தாக்குதல் உக்ரைனின் ஏவுகணை, வான்வெளி மற்றும் ஆயுத தொழில்நுட்ப உற்பத்தி மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. “எங்கள் இலக்குகள் அனைத்தும் எட்டப்பட்டன,” என ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதே நேரத்தில், அமெரிக்கா தலைமையிலான அமைதி முயற்சி புதிய தடைகளை எதிர்கொண்டது. அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ், இரு நாடுகளும் ஒரு ‘தெளிவான அமைதி முன்மொழிவுக்கு’ ஒத்துழைக்காவிட்டால் அமெரிக்கா பின்னடைவதாக எச்சரித்துள்ளார்.