9 C
Switzerland
Wednesday, May 21, 2025

சுவிஸில் இடம்பெறும் தொலைபேசி வழியான மோசடிகள்

Must Read

சுவிட்சர்லாந்தில் தொலைபேசி வழியான மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகள், சுங்கப் பிரிவு அதிகாரிகள் அல்லது சர்வதேச பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்வோர் மிக முக்கியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் இது ஆபத்தானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் முதல் சில வாரங்களில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

போலியான முறையில் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு பணம் பறிப்பதாகவும், பல்வேறு தகவல்களை களவாடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குரல்களையும் மாற்ற முடியும் எனவும், இதனால் இவ்வாறான அழைப்புக்களின் போது பலர் ஏமாந்து விட நேரிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் கைகளில் சிக்காது இந்த மோசடிகாரர்கள் பல்வேறு நபர்களை ஏமாற்றி வருவதாகவும் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா, பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் கால் சென்டர்களிலிருந்தும் தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி வழியாக இடம்பெறக்கூடிய மோசடிகளில் அதிகளவில் சுவிட்சர்லாந்தின் வயோதி சமூகத்தினர்  பாதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோசடிகளில் சிக்கியவர்களில் பலர் முறைப்பாடு செய்வதில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான மோசடியான தொலைபேசி அழைப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு தொலைபேசி நிறுவனங்களும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES