கனடாவில் மக்கள் மீது வாகனம் மோதச் செய்யப்பட்டதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
கனடாவின் வான்கூவாரில் இந்த சம்பவமட் இடம்பெற்றுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டவர்களினால் கொண்டாடப்படும் லாபு லாபு தின நிகழ்வுகளின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நபர் ஒருவர், இந்த நிகழ்வில் குழுமியிருந்த மக்கள் மீது வாகனத்தை மோதச் செய்துள்ளார்.
சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்பெய்ன் காலாணித்துவத்திலிருந்து பிலிப்பைன்ஸ் மீண்டதனை முன்னிட்டு லாபு லாபு தினம் கொண்டாடப்படுகின்றது.
கடந்த 16ம் நூற்றாண்டு முதல் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.
இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலா என்ற அடிப்படையிலும் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.