7.9 C
Switzerland
Friday, May 23, 2025

காசாவில் மனிதாபிமானப் பேரழிவு: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

Must Read

காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவர் பியர் கிராகென்புல் (Pierre Krahenbuhl), கடும் வருத்தம் வெளியிட்டார்

கட்டார் தோஹாவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் (Global Security Forum) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“காசா மக்கள், மரணம், காயங்கள், மீண்டும் மீண்டும் இடம்பெயர்தல், உடல் பாகங்களை இழத்தல், காணாமல் போதல், பட்டினி உள்ளிட்ட கொடூரங்களை அனுபவித்து வருகின்றனர்,” என அவர் கூறியுள்ளார்.

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போது மக்கள் தாங்கள் மோசமான நிலையை கடந்து விட்டோம் என நம்பிய நிலையில், ஒரு புதிய நரகக் காட்சியே துவங்கியுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த கொடூரம் மற்றும் மனிதமற்ற அணுகுமுறை நம்மை பல தசாப்தங்களுக்கு கவலை கொள்ளச் செய்யும் என  பியர் கிராகென்புல் தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES