சுவிட்சர்லாந்தில் 2024ஆம் ஆண்டில் இனவெறி சம்பவங்கள் 20% அதிகரித்துள்ளதாக இனவெறிக்கு எதிரான சுவிட்சர்லாந்து கூட்டணியான Federal Commission against Racism (FCR) தெரிவித்துள்ளது.
2025 ஏப்ரல் 27 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இனவெறி மற்றும் வெளிநாட்டு விரோத சம்பவங்கள் பெரும்பாலும் பள்ளிகளில், வேலைத்தளங்களில் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கறுப்பினத்தினருக்கு எதிரான இனவெறி குறிப்பாக அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிரடி அதிகரிப்பு 2024ஆம் ஆண்டு, இனவெறி சம்பவங்களுக்கான ஆலோசனைச் சேவையில் 1,211 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன, இது 2023ம் ஆண்டைவிட சுமார் 40% அதிகம் (மொத்தம் 335 சம்பவங்கள் அதிகரிப்பு).
இந்த உயர்வு, பொதுமக்கள் கருத்துகளின் வகுப்புபடுத்தல் (polarisation) மற்றும் உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளால் ஏற்பட்டதாகவும், மேலும் ஆலோசனை மையங்கள் பற்றி அதிகமானோர் அறிந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக உதவி நாடி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயக் கல்வி பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு, ஹிட்லர் வாழ்த்து மற்றும் வலதுசாரி தீவிரவாத சின்னங்களை பயன்படுத்துதல் போன்ற சம்பவங்கள் பதிவாகின.
ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூக பணியாளர்கள் ஆலோசனை மையங்களின் உதவியுடன் பதிலளித்தனர்.
கல்வி துறையில் இனவெறி எதிர்ப்பு பணிகள் அதிகரிக்க வேண்டுமெனவும், ஆசிரியர்கள் கூடுதல் பயிற்சி பெற வேண்டுமெனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.