ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் பல பகுதிகளில் பரந்தளவிலான மின்சாரம் தடைப்பட்டு, சாலை போக்குவரத்தும், விமான நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
, “காரணங்களை ஆய்வு செய்துகொண்டு, மின் வழங்கலை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஸ்பெயினின் மின் வலையமைப்பு ஒழுங்குபடுத்தும் நிறுவனம் “ரெட் எலெக்ட்ரிக்கா” தெரிவித்துள்ளது.
போர்ச்சுகலின் போலீஸ் துறை, சாலை விளக்குகள் மற்றும் தெருவிளக்குகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து, பொதுமக்கள் வேகத்தை குறைத்து மிகுந்த கவனத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டது. “பாதுகாப்பான ஓட்டத்தை முன்னிலைப்படுத்துங்கள்; உங்கள் அமைதியான நடத்தை உயிர்களை காக்கும்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“விமான நிலையத்தில் மின் நிறுத்தம் ஏற்பட்டதால், நூற்றுக்கணக்கான பயணிகள் இருட்டில் வரிசையாக நிற்பதாக லிஸ்பன் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
கழிப்பறைகளிலும் குடிநீர் நிலைகளிலும் நீர் வழங்கல் நிறுத்தப்பட்டது, குளிரூட்டும் அமைப்பும் செயலிழந்துள்ளது. கடைகள் தற்போது பணத்தை மட்டும் ஏற்கின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாட்ரிடில், சாலை விளக்குகள் செயலிழந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பிரான்சின் சில பகுதிகளும் இந்த மின்தடையின் தாக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகுின்றது.
“மிக அவசர தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், அவசர சேவைகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும்” என மாட்ரிட் நகர மேயர் ஜோஸ் லுயிஸ் மார்டினஸ் அல்மெய்டா அறிவித்துள்ளார்.
மாட்ரிட் மெட்ரோ நிலையம், “மின்சாரம் இல்லாததால் அனைத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது,” என தெரிவித்தது. உள்ளூர் ஊடகங்கள் கூறுகையில், மெட்ரோவின் சில பகுதிகள் இடப்பெயர்த்தும் உள்ளன.
மாட்ரிட் பாரஜாஸ் விமான நிலையமும் (மாநில தலைநகரின் முக்கிய சர்வதேச விமான நிலையம்) இருட்டில் மூழ்கியுள்ளதாகவும், பல விமானங்கள் தாமதமடைந்ததும், ரத்து செய்யப்பட்டதும் விமான கண்காணிப்பு சேவைகளில் தெரிய வந்துள்ளது.