9 C
Switzerland
Wednesday, May 21, 2025

கனடாவின் பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் சாத்தியம்

Must Read

கனடாவின் பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் சாத்தியம் உருவாகியுள்ளது.

எனினும் லிபரல் கட்சியினால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தள்ளது.

நேற்றைய தினம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி முன்னணி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் மொத்தமாக 343 ஆசனங்களுக்காக தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்தற்கு 172 ஆசனங்களை கைப்பற்ற வேண்டியுள்ளது.

கொன்சர்வட்டிவ் கட்சியை விடவும் லிபரல் கட்சி கூடுதல் ஆசனங்களை பெறும் என கருத்துக் கணிப்புக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான ஓர் பின்னணியில் லிபரல் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டி சிறுபான்மை அரசாங்கமொன்றை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவின் வரி விதிப்பு, கனடாவை 51ம் மாநிலமாக உள்வாங்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு போன்ற முக்கிய காரணிகளின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது.

ஏற்கனவே லிபரல் அரசாங்கம் என்.டி.பி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES