வீட்டில் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களினால் உயிராபத்து ஏற்படும் இதய நோய்கள் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பயன்படும் சின்னச் சின்ன பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் ‘பத்தாலேட்டுகள் (Phthalates)’ என்ற செயற்கை ரசாயனங்கள், 55 முதல் 64 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களில் இதய நோய் மூலம் ஏற்படும் இறப்புகளில் 10%க்கு மேல் பங்களித்திருக்கலாம் என புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
இந்த ரசாயனங்கள் சாப்பாடு வைக்கும் பாக்ஸ், ஷாம்பூ, வாடிகட்டி, குழந்தைகளுக்கான பொம்மைகள் என பல்வேறு பொருட்களில் அதிகளவில் காணப்படுகின்றன.
பத்தாலேட்டுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு
“பத்தாலேட்டுகள் நரம்புகளில் கட்டியான அழற்சி ஏற்படுத்தி இதய நோயை தீவிரப்படுத்துகின்றன. இது ஆபத்தான நிலைகளுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்,” என நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிலையத்தின் பேராசிரியர் டொக்டர் லியனார்டோ ட்ராசெனெட் Dr. Leonardo Trasande, தெரிவித்துள்ளார்.
இந்த இரசாயனங்களினால் குழந்தைகளில் மூளை வளர்ச்சிக்குத் தடை, ஆண்களில் டெஸ்டோஸ்டெரோன் குறைபாடு, உயிரணுக்கள் குறைபாடு, பிறப்பியல் குறைபாடுகள், புற்றுநோய், குழந்தையின்மை, ஆஸ்துமா போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு உலகம் முழுவதும் 200 நாடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் மரணச் சான்றுகளின் அடிப்படையில், DEHP எனப்படும் ஒரு முக்கிய பத்தாலேட், 368,764 உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆப்பிரிக்கா: 30%
- கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு: 25%
பீவீசீ PVC குழாய்கள், மருத்துவ குழாய்கள், தோட்டக்குழாய்கள், குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், சாப்பாட்டு பேக்கேஜிங், சோப்பு, ஹேர் ஸ்ப்ரே, வாசனைப் பொருட்கள் போன்றவற்றில் இந்த இரசாயனம் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
📉 பாதிப்பை குறைப்பது எப்படி?
- பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும்
- உணவு வைக்க கண்ணாடி, செராமிக், உலோக பாட்டில்கள் பயன்படுத்தவும்
- வாசனையில்லா சோப்பு, சுத்தம் செய்யும் பொருட்கள் பயன்படுத்தவும்
- சுத்தமான கைகளைக் வைத்திருக்கும் பழக்கம் வளர்க்கவும்
- No.3, No.6, No.7 என குறிக்கப்பட்ட பிளாஸ்டிக் வகைகளை தவிர்க்கவும்
- பிளாஸ்டிக் பாட்டில்களில் உணவை சூடாக்க வேண்டாம்
அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 91,000 – 107,000 பேர் பத்தாலேட்டுகள் காரணமாக உயிரிழக்கின்றனர் என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது $40-$47 பில்லியன் வரையிலான பொருளாதார இழப்புக்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.