தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் மக்கள் அபிலாசைகளுக்கு செவிசாய்த்து, அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை நிகழ்த்தும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
76 ஆண்டுகள் சுரண்டலையும், குடும்பதொடர்புடைய ஆட்சிப் பேரழிவையும் பொறுத்த மக்களின் தீர்மானத்தின் மூலம், தற்போது இலங்கை புதிய பாதையில் பயணிக்கிறது. இந்த மாற்றத்தில் மக்கள் நாடு முழுவதும், மதம், இனம் பார்க்காமல் ஒன்றிணைந்தனர்,” என ஜனாதிபதி கூறினார்.
“நீண்ட கால ஊழலால் சீரழிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியில், நாங்கள் நிலையான முன்னேற்றத்தை ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை வரலாறு காணாத வகையில் உயர்த்தினோம் எனவும், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், சிறிய தொழில் முனைவோர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு பலன்கள் வழங்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால பிரச்சனைகளும், அவர்களின் மாற்றமற்ற குடிமக்கள் உரிமைகளும் அடையாளப்படுத்தப்பட்டு, தீர்வுகள் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
“நவீன தொழில்நுட்பங்களால் மாறிவரும் சமூகத்தில், டிஜிட்டல் அணுகல், சூழலியல் உரிமைகள் ஆகிய புதிய உரிமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
1948-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை அறிவிப்பில் இடம்பெறாத இந்த புதிய உரிமைகள்,
சர்வதேச அளவில் புதிய முழுமையான அறிவிப்பை தேவைப்படுத்துகின்றன,” எனத் தெரிவித்துள்ளார்.