நாட்டின் எதிர்காலமும் மக்களின் நலனும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கைகளில் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்ற மே தின பேரணியில் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் இப்போது ஒரு அரசியல் இயக்கமாக இல்லாமல் “ஒரு குப்பைக் குவியலாக” மாறிவிட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
“நமக்குப் புறத்தில் எதிரிகள் எவரும் இல்லை. நம்மிடையே உள்ள முரண்பாடுகளும், புதிய சூழல்களுக்கு நாம் எப்படி ஏற்படுகிறோமோ, அதுவே நம்முடைய சவாலாக உள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“ஆறு மாதங்களில் முடிவுகளை யாரும் எதிர்பார்க்க முடியாது. குறுகிய வழிகள் இல்லை. ஆனால், நாம் நாட்டை ஒரு திட்டமிடப்பட்ட பாதையில் முன்னேற்றுவதற்கான பலமான அடித்தளத்தை அமைத்துள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“நிறைவான அரசியல் பண்பாட்டை, தேசிய ஒற்றுமையை, சட்டத்தின் ஆட்சி மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை நாம் ஏற்படுத்துவதற்காக அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
தங்களது பழைய மனப்பான்மைகளை தொழிற்சங்கங்கள் துறக்க வேண்டும். சின்ன விஷயங்களுக்காக கூட போராட வேண்டாம். நாங்கள் அரசியல் சக்தியாக அரசியலமைப்பிலும் அரச நெறிமுறைகளிலும் வழங்கப்பட்ட பல உரிமைகளை மறுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு, வருடாந்த உயர்வுகள் மற்றும் போன்ற பல்வேறு விடயங்களை கோரிக்கை இல்லாமல் நாங்களே நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
எனவே, போராட்டத்திற்கு முன் கொஞ்சம் நேரம் கொடுங்கள். நாங்கள் உங்கள் இதயத்துடிப்பையும் எதிர்பார்ப்புகளையும் உணரக்கூடிய திறன் தமக்கு உண்டு என சுட்டிக்காட்டியுள்ளார்.