யுக்ரேன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட யுக்ரேனை மறுசீரமைப்பதற்கும் அமெரிக்காவிற்கு அரிய கனிம வளங்களில் அணுகல் வழங்குவதற்குமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் பல மாத பேச்சுவார்த்தைகள், கடைசி நிமிட மாற்ற முயற்சிகளுக்குப் பிறகு புதன்கிழமை கையெழுத்திடப்பட்டுள்ளது.
அமெரிக்கா நேரடியாகவும், இராணுவ உதவியாகவும் பங்களிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரேன், இயற்கை வளங்களை சுரண்டுவதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் 50% பங்களிக்கிறது.
முதல் 10 ஆண்டுகளில், நிதியின் முழு முதலீடும் யுக்ரேனுக்குள் செலவிடப்படும்.
இந்த நிதி அமைப்பு, ஒரு சுதந்திரமான, பாதுகாக்கப்பட்ட மற்றும் வளமான யுக்ரேனுக்கான நீடித்த அமைதி முயற்சிக்கான நமதுடைய உறுதியைக் காட்டுகிறது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதேவேளை, வலுவான பொருளாதார பங்காளியை நாங்கள் பெற்றுள்ளோம் என்பதையும், வளர்ச்சியிலும் புதுமை கொண்டு வர நாங்கள் தயாராக உள்ளோம் என்பதையும் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.