9 C
Switzerland
Wednesday, May 21, 2025

கடவுச்சீட்டு வழங்கும் 24 மணிநேர சேவை குறித்து விசேட அறிவிப்பு

Must Read

உள்ளூராட்சி தேர்தல்களுக்கான ஏற்பாடுகளின் காரணமாக மே 5, 6 மற்றும் 7 திகதிகளில் ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் 24 மணி நேர சேவையை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இது குறித்து அறிவித்துள்ளது.

மேலும், இந்த நாட்களில் சாதாரண மற்றும் ஒரே நாள் கடவுச்சீட்டு சேவைகள் இரண்டும் கட்டுப்பாடுகளுடன் மட்டுமே வழங்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, கடவுச்சீட்டு சேவைகளை பெற விரும்பும் பொதுமக்கள் இந்த தினங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலால் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன என குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES