சுவிட்சர்லாந்தில், முதன்முறையாக, பெரும்பாலான பிரஜைகள் தங்களது ஓய்வூதிய நிதியை மாதம் மாதமாக அல்லாமல் முழுமையான தொகையாக (lump sum) பெற விரும்புவதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு 2025 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 28 வரை ஜெர்மன் பேசும் பகுதியைச் சேர்ந்த 1,200 பேர் (வேலை செய்வோர் மற்றும் ஓய்வுபெற்றவர்கள்) பங்கேறபில் நடத்தப்பட்டுள்ளது.
விஇஸட் வெர்மொஜென் ஸென்ட்ரொம் VZ VermögensZentrum நிதி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டது.
27% பேர் மாதம் மாதம் ஓய்வூதியம் (annuity) விருப்பம் வெளியிட்டுள்ளனர், 33% பேர் முழு தொகையாக பணமாக (capital only) விருப்பம் வெளியிட்டுள்ளனர், 40% பேர் இரண்டின் கலவையை (mix of both) விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

