இலங்கையில் போர் காலத்தில் விடுதலைப் புலிகளின் (LTTE) வசத்தில் காணப்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், இன்று இலங்கை இராணுவத்தினால் , பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம், இராணுவம் இந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை அதிகாரபூர்வமாக ஒப்படைத்துள்ளது.
இந்த நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
இராணுவ தகவல்களின் படி, இந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் தேசிய மாணிக்ககல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் மதிப்பீடு செய்ய இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட உள்ளது.
முக்கியமாக, உரிய அடையாளத்துடன் சொத்துரிமையை நிரூபிக்கக்கூடிய நபர்களுக்கு இந்த பொருட்கள் திருப்பி வழங்கப்படும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மத்திய வங்கி மற்றும் பொலிஸ் தலைமையகத்தின் வழியாக மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.