உலகளாவிய குழப்பங்களை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக, நிலைத்தன்மையையும் நம்பிக்கையையும் விரும்பிய ஆஸ்திரேலியர்கள், பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸிக்கு இரண்டாவது முறையாக அதிகாரத்தை அளித்து, லேபர் கட்சிக்கு பெரும்பான்மை வெற்றியைக் கொண்டுவந்தனர்.
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பிரதமராக வெற்றி பெற்ற முதல் ஆஸ்திரேலிய தலைவராக ஆல்பனீஸி வரலாறு படைத்துள்ளார்.
150 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில், அவரது லேபர் கட்சி குறைந்தபட்சம் 87 இடங்களை வென்றுள்ளதாக தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இந்த வெற்றி, கனடாவில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி பெற்ற வெற்றியை ஒத்ததாகும். கனடா மற்றும் ஆஸ்திரேலியா – இரு நாடுகளும், டிரம்பின் உலகளாவிய வரிகள் மற்றும் கொள்கை திருப்பங்களால் பாதிக்கப்பட்ட பிறகு, இடதுசாரி வழியையே தேர்ந்தெடுத்துள்ளன.
அவுஸ்திரேலியர்களின் அமெரிக்காவைப் பற்றிய நம்பிக்கை குறைந்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்புத்துறை மற்றும் குடிவரவு அமைச்சராக இருந்த பீட்டர் டட்டன், தேர்தலில் பிரதமராக மாறும் எண்ணத்துடன் களமிறங்கினார். ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்த இடத்தை இழந்து, கொடிய தோல்வியைச் சந்தித்தார்.