ஜூன் மாதத்தில் மின்சார கட்டண திருத்தம் மூலம் விலை உயர்வேற்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளுக்கிணங்க, செலவுகளை பிரதிபலிக்கும் மின்சார விலை நிர்ணயம்தான் தொடர வேண்டும் என வலியுறுத்துள்ளார்.
திறைசேரியினால் தொடர்ந்தும் இலங்கை மின்சார சபைக்கு (CEB) சலுகை வழங்க முடியாது எனவும் மின்சார விலை உண்மையான உற்பத்திச் செலவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வசதி குறைந்த சமூகங்களுக்கே அரசு நிவாரணம் வழங்கும் எனவும், அதாவது மீனவர்கள் போன்றோருக்கு உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் விளக்கியுள்ளார்.
ஆனால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற அரசின் சொத்துகளான நிறுவனங்கள் வணிக அடிப்படையிலேயே இயங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது பெற்றோலிய விலைகளை மாதந்தோறும் உண்மை தரவுகளின் அடிப்படையில் திருத்துகிறது.
இதேவிதமாக இலங்கை மின்சாரசபையும் விலைகளை நிர்ணயிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.