இங்கிலாந்தில் தீவிரவாதத் திட்டம் ஒன்றைத் “திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு தாக்குதல் நடத்த முயற்சி” செய்ததாக சந்தேகத்தின் பேரில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
கைதானவர்களில் நான்கு பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவருக்கு 29 வயதும், மற்றொருவருக்கு 40, மற்றொருவருக்கு 46 வயதும் என போலீசார் கூறியுள்ளனர்.
ஐந்தாவது நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது பற்றியோ அல்லது அவரது வயது பற்றியோ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மெட்ரோபொலிடன் போலீசாரின் தகவலின்படி, சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் கீழ்கண்ட இடங்களில் பிடியாணை மூலம் கைது செய்யப்பட்டனர்:
- சுவின்டன் (Swindon) – 29 வயது ஒருவர்
- ஸ்டாக்போர்ட் (Stockport) – 29 வயது ஒருவர்
- மேற்கு லண்டன் – 46 வயது ஒருவர்
- ரோச்ச்டேல் (Rochdale) – 40 வயது ஒருவர்
- மாஞ்செஸ்டர் (Manchester) – ஒருவர் (வயது மற்றும் நாட்டுத் தகவல் பெறப்படவில்லை)
நான்கு பேர் தீவிரவாதச் சட்டத்தின் கீழ், ஐந்தாவது நபர் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, போலீசார் மாஞ்செஸ்டர், லண்டன் மற்றும் சுவின்டன் பகுதிகளில் உள்ள பல வீடுகளில் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையை மெட்ரோபொலிடன் போலீசாரின் தீவிரவாத தடுப்பு பிரிவு முன்னெடுத்து வருகிறது. அவர்களுக்கு கிரேட்டர் மாஞ்செஸ்டர், வில்ட்ஷயர் போலீசார் மற்றும் தேசிய அளவிலான தீவிரவாத தடுப்பு பிரிவுகள் உதவியாக செயல்பட்டு வருகின்றனர்.
“இந்த விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இதன் பின்னணி மற்றும் பொதுமக்களுக்கு மேலதிக ஆபத்து உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என மெட்ரோபொலிடன் தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் கமாண்டர் டொமினிக் மர்ஃபி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எப்போதும் போலவே, சந்தேகமூட்டும் விடயங்கள் தெரிந்தால் எங்களை தொடர்புகொள்ள வேண்டுகிறோம் என கோரியுள்ளார்.