இந்திய படையினர் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்து-பாக் எல்லையில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்திய படைகள் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிகளிலும் மூன்று இடங்களில் மிசைல்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்தார். இந்த தகவலை பாகிஸ்தானின் அரச தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டுள்ளது.
, பாகிஸ்தான் நிர்வாகிக்கும் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாரிய வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது கடந்த மாதம் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இருநாடுகளுக்கிடையே உருவாகியுள்ள கடும் பதற்றத்தின் தொடர்ச்சியாகவாகவும், பதிலடியாகவும்தான் இந்த தாக்குதல் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
“சிந்தூர் நடவடிக்கை” என்ற குறியீட்டுப் பெயரில், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாதக் கூடங்கைகளில் ஒன்பது இடங்களில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளது.
“இந்த நடவடிக்கைகள் கவனமாகவும் அளவாகவும் மேற்கொள்ளப்பட்டன. பாகிஸ்தான் இராணுவ தளங்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. இந்தியா மிகுந்த பொறுமையுடன், துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது,” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள கோட்லி பகுதியில் இரண்டு பொதுமக்களும், பாகிஸ்தானின் பஹாவல்பூர் பகுதியில் ஒரு சிறுவனும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் அஹமத் ஷரீப் சௌத்ரி தெரிவித்தார். மேலும் பஹாவல்பூரில் உள்ள அக்மத்பூர் ஷர்கியா பகுதியில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகுின்றது..
ஒரே குடும்பத்தில் ஒரு சிறுவன் உட்பட சிலர் இடிந்து விழுந்த வீடுகளின் கீழ் சிக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப், “இந்தியாவின் இந்த மிரட்டலான மற்றும் கோமாளித்தனமான தாக்குதல் நிச்சயமாக பதிலளிக்கப்படும். பாகிஸ்தான் தனது முழு உரிமையுடன், உறுதியான பதிலை அளிக்கும். மக்கள் மற்றும் இராணுவம் ஒருங்கிணைந்திருப்பது போன்ற நேரத்தில், எந்த எதிரியையும் எதிர்கொண்டு தோற்கடிக்க தயாராக இருக்கிறோம்” எனத் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.