இலங்கை, பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளின் குடிமக்களுக்கு பிரிட்டனில் வேலை அல்லது கல்விக்காக வருவது கடினமாகலாம் என அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
வேலை மற்றும் படிப்பு விசாக்கள் மூலம் வந்து, பின்னர் தஞ்சம் கோருவதற்கான முயற்சிகள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் சட்டப்படி வேலை அல்லது படிப்புக்காக விசா பெறுபவர்கள், பின்னர் தஞ்சம் கோருவதற்கான மனுவை தாக்கல் செய்வதன் மூலம், நிரந்தரமாக அந்நாட்டில் தங்க முயல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில், குறித்த நாடுகளுக்கான விசா வழங்கலில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் வரவிருக்கும் குடியேற்ற ஒளிவழி (Immigration White Paper) முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை முன்வைக்கும். இது எங்கள் முறையே இடர்ப்பாடாகியுள்ள குடியேற்ற முறைக்கு ஒழுங்கை மீண்டும் கொண்டு வரும் என அறிவித்துள்ளது.
விசா பெறுவோர் நாட்டைவிட்டு வெளியேறினரா இல்லையா என்பது தொடர்பான புள்ளிவிவரங்கள் 2020க்கு பிறகு வெளியிடப்படவில்லை.
எனவே, யார் கூடுதலாக தங்கியிருக்கின்றார்கள் (overstay) என்பதை தெளிவாகக் கூற முடியவில்லை. இதனால், சில தெளிவற்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
வெளிநாட்டுப் பயணிகள் விசா முறையை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற எண்ணத்துடன் இந்த திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஆனால், இதனால் தஞ்சம் கோரும் மனுக்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது,” என லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜொனாதன் போர்ட்ஸ் தெரிவித்தார்.
பிரதமர் கியர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி அரசு, சட்டவிரோத குடியேற்றத்துடன் கூடச் சட்டப்படி வரும் குடியேற்றத்தையும் குறைப்பது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், மொத்த குடியேற்ற எண்ணிக்கைக்கு இலக்கு நிர்ணயிக்க மறுத்துள்ளனர்.
2023 இல் குடியேற்றத்தில் சாதனையாக 9.06 இலட்சம் பேர் பிரிட்டனுக்குள் வந்தனர். ஆனால் 2024 இல் அது 7.28 இலட்சமாக குறைந்தது. இது முன் பிரதமர் ரிஷி சுனக் விதித்த புதிய கட்டுப்பாடுகளால் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், வேலை மற்றும் கல்வி விசா பெறுவதில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் கடுமையான தடைகளை எதிர்கொள்வதற்கான சாத்தியம் உள்ளது.