9 C
Switzerland
Wednesday, May 21, 2025

இலங்கை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களம்

Must Read

உள்ளுராட்சி மன்ற தேர்த தேர்தலில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அளிக்கப்பட்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

திஹாமடுல்ல 31%

யாழ்ப்பாணம் 23%

வவுனியா 37%

மன்னார் 40%

மொனராகலை 23%

நுவரெலியா 22%

கேகாலை 33%

அனுராதபுரம் 30%

களுத்துறை 20%

கம்பஹா 20%

பதுளை 36%

இரத்தினபுரி 30%

காலி 35%

மாத்தறை 42%

கிளிநொச்சி 22%

புத்தளம் 30%

மாத்தளை 25%

கண்டி 21%

ஹம்பாந்தோட்டை 20%

கொழும்பு 28%

பொலநறுவை 34%

குருணாகல் 20%

திருகோணமலை 36%,

மட்டக்களப்பு 25%,

முல்லைத்தீவு 25%

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களுடன் ஒப்பீடு செய்யும் போது இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்போர் எண்ணிக்கையில் சரிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அமைத்து சுமார் 7 மாதங்களில் இலங்கையில் நடைபெறும் மூன்றாவது தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பின்னர் நடைபெற்ற பொது தேர்தலிலும் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள், சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய பிரதான அரசியல் கட்சிகள் சுயேட்சை குழுக்கள் என்பன இம்முறை தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர்.

குறிப்பாக இம்முறை தேர்தல் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

ஏனெனில் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் மத்தியில் எவ்வாறான நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறித்த ஓர் தேர்தலாக இந்த தேர்தல் கருதப்படுகின்றது.

கடந்த ஆறு மாத காலங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வந்த திட்டங்களை மக்கள் ஆமோதிக்கின்றனரா அல்லது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்கள் நிராகரிக்கின்றார்களா என்பது குறித்த ஓர் மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பாக இந்த வாக்கெடுப்பு கருதப்படுகின்றது.

குறுகிய காலத்தில் ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மக்களின் வாழ்க்கைச் செலவு சுமையை குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் பிரசாரம் செய்து தேர்தலில் களம் இறங்கியது.

இதேவேளை, அரசாங்கம் கடந்த ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் பல்வேறு பொய்களைக் கூறி ஆட்சி அதிகாரத்தில் கைப்பற்றிக் கொண்டதாகவும் எதிர்க்கட்சிகள் சராமரி குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையில் சிறு சரிவு ஏற்படும் என அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அளித்த ஆணையில் குறைவு ஏற்படும் என்ற போதிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் ஆளும் கட்சி வெற்றியும் சாத்தியம் அதிகம் என நிபுணர்கள் எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளனர்.

தகுதியான வாக்காளர்கள்: 17,156,338

ஏற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் வாக்காளர்கள்: 648,494

வாக்களிப்பு மையங்கள்: 13,759

வேட்பாளர்கள்: 75,589

நிரப்பப்பட வேண்டிய இடங்கள்: 8,287

அரசியல் கட்சிகள்: 49

சுயேச்சைக் குழுக்கள்: 257

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES