இலங்கையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு பிற்பகல் 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு பிற்பகல் 4.00 மணியுடன் நிறைவடைந்தது.
339 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இந்த தேர்தல் நடைபெற்றது.
8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களின் சார்பில் 75589 பேர் போட்டியிட்டனர்.
28 மாநகரசபைகள், 36 நகரசபைகள் மற்றும் 275 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இந்த தேர்தல் நடைபெற்றது.
இதேவேளை, அநேகமான மாவட்டங்களில் வாக்குப் பதிவு சராசரியாக 45 வீதமாக பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாவட்டங்களின் வாக்குப் பதிவு விபரம்
நுவரெலியா – 60%
முல்லைத்தீவு – 60%
மன்னார் – 70%
பதுளை – 60%
அனுராதபுரம் – 60%
பொலன்னறுவை – 64%
மொனராகலை – 61%
கேகாலை – 58%