9 C
Switzerland
Wednesday, May 21, 2025

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கூறும் செய்தி

Must Read

இலங்கையில் நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி குறிப்பிடத்தக்களவு பின்னடைவை சந்தித்துள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் ஆளும் கட்சி சுமார் 45 லட்சம் வாக்குகளுடன் 265 உள்ளுராட்சி மன்றங்களில் முன்னணி வகிக்கின்றது.

இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் 3926 உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

இம்முறை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி 42.26 வீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் 42.31 வாக்குகளையும் நாடாளுமன்றத் தேர்தலில் 61.56 வீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டிருந்தது.

எனினும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு அதிகாரத்தை கைப்பற்றவில்லைதேசிய மக்கள் சக்தி 22 லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகளுடன் 14 உள்ளுராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் 1767 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குக்ளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன முன்னணியின் சார்பில் 742 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சுமார் நான்கு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 381 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் சுயாதீனக் குழுக்களும் 18 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், அவற்றின் சார்பில் 1676 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

இந்த கட்சிகள் சுமார் 54 உள்ளுராட்சி சபைகளில் முன்னணி வகிக்கின்றன.

குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி 307657 வாக்குகளுடன் 377 ஆசனங்களைப் பெற்றுககொண்டுள்ளன.

தமிழரசுக் கட்சி மூன்று மாநகரசபைகள் ஒரு மாநகரசபை உள்ளிட்ட 37 உள்ளுராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கின்றது.

புதிய தேர்தல் முறையில் நடைபெற்ற இரண்டாவது தேர்தல் என்ற அடிப்படையில் பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி நிறுவுவதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி பல தொகுதிகளில் முன்னண வகித்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

ஏனெனில் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் தேசிய மக்கள் சக்தியை விடவும் எதிர்க்கட்சிகள் கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

இதனால் சபைகளில் ஆட்சியை நிறுவுவது சவால் மிக்கது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் மேடைகளில் அரசாங்கம் வழங்கிய சில வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதங்களும் இந்த தேர்தல் பின்னடைவிற்கு ஓர் பிரதான ஏதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES