இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் பின்னணியில் இன்ஸ்டா மற்றும் முகநூல் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்திய பயனாளர்களுக்காக ஒரு பிரபலமான இஸ்லாமிய செய்தி பக்கத்தை அணுக முடியாத வகையில் தடை விதித்துள்ளது.
6.7 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட @Muslim என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை இந்தியாவில் அணுக முயன்ற பயனாளர்களுக்கு, “இந்தியாவில் இந்த கணக்கு கிடைக்கவில்லை. உள்ளூர் சட்டத்திற்கேற்ப உள்ளடக்கம் தடை செய்யப்பட்டதால் இது ஏற்பட்டுள்ளது” எனக் கூறும் செய்தி காட்டப்பட்டுள்ளது.
“இந்தியாவில் உள்ள எங்கள் பின்தொடர்பாளர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான செய்திகளும், மின்னஞ்சல்களும், கருத்துகளும் வந்தன. அவர்கள் எங்கள் கணக்கை அணுக முடியவில்லை தெரிவித்துள்ளனர்” என இந்த பக்கத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான அமீர் அல்-கதாஹ்த்பே என கூறியுள்ளார்.
“இந்திய அரசின் சட்டவழி கோரிக்கையின்படி, மெட்டா நிறுவனம்இந்த பக்கத்தை தடை செய்துள்ளது. இது தணிக்கையாக்கம்,” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மெட்டா நிறுவனம் இந்த விவகாரத்தில் பதிலளிக்க மறுத்த நிலையில், ஒரு பேச்சாளர், நிறுவனத்தின் உள்ளடக்கக் கட்டுப்பாடு கொள்கையை விளக்கும் இணையதளத்தை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளார். அந்தக் கொள்கையின் படி, எந்த ஒரு உள்ளடக்கம் ஒரு நாட்டின் உள்ளூர் சட்டத்திற்கு எதிராக இருக்கும்போது, அரசாங்கக் கோரிக்கையின் அடிப்படையில் அதனை தடை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த திரைப்பட நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சமூக ஊடகக் கணக்குகளுக்கும் அணுகலை இந்தியாவிலிருந்து தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.