19.6 C
Switzerland
Monday, May 19, 2025

புதிய பாப்பாண்டவர் யார் என்பதை காண குழுமிய மக்கள்

Must Read

புதிய பாப்பாண்டவர் யார் என்பதை காண்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வத்திக்கானில் கூடியுள்ளனர்.

குறிப்பாக சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு அருகாமையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குழுமியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கத்தோலிக்க மதத் தலைவர்கள், கத்தோலிக்க பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் இவ்வாறு குழுமியுள்ளனர்.

தேவாயலத்தின் பல்கனி பகுதியில் இன்னும் சொற்ப வேளையில் புதிய பாப்பாண்டவர் தோன்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் 267ம் பாப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கர்தினால்கள் கூடி நடத்திய வாக்கெடுப்பின் மூலம் பாப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாவது நாளாக நான்காவது தடவையாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பாண்டவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES