9 C
Switzerland
Wednesday, May 21, 2025

ரஷ்யாவுடன் போர் ஏற்படக் கூடிய அபாயம் – நெதர்லாந்து அச்சம்

Must Read

ரஷ்யாவுடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான இராணுவ மோதலுக்காக, நெதர்லாந்து தற்போது முன்னெச்சரிக்கையாக தயாராகி வருகிறது என அந்நாட்டு இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உளவுத்துறை அமைப்பான MIVD-வின் இயக்குநர் மற்றும் துணை அதிபர் அட்மிரல் பீட்டர் ரிஸ்னிக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“உக்ரைனில் நடைபெறும் யுத்தம் முடிந்த பிறகு,  ரஷ்யா ஒரே ஆண்டுக்குள் மற்றொரு போருக்கு தயாராகிவிடும்” என அவர் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

நேட்டோ உறுப்பு நாடுகளுடன் இணைந்து உயர்ந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அதற்கு நெதர்லாந்தும் தயாராக இருக்கிறது” எனவும் ரிஸ்னிக் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், ரஷ்யாவை விட சீனாவே மிகப் பெரிய எதிரி என்றும் அவர் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தக் கருத்துகள், நெதர்லாந்தின் அரசர் வில்லெம் அலெக்ஸாண்டர் அண்மையில் வழங்கிய உரையின் பின்புலத்தில் வெளியாகியுள்ளது.

அதில், நாட்டின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் வகையில் ஆயுத பலத்தை விஸ்தரிக்க வேண்டுமென அரசர் வலியுறுத்தியிருந்தார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES