இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இன்று ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், தற்போதைய பதற்றங்களை குறைத்து, எதிர்கால அமைதிக்கான ஒரு நேர்மறையான நடவடிக்கையாகும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
“இன்று ஏற்பட்ட ஒப்பந்தம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பிரச்சனைகளை சமாதானமாக தீர்க்கும் முயற்சிக்கு வழிவகுக்கும் என செயலாளர் நாயகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.”
மேலும், பிராந்திய வலயத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் ஐக்கிய நாடுகள் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னைகள் மற்றும் நீண்ட கால மதிப்புமிக்க முரண்பாடுகள் ஏராளமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.