13.3 C
Switzerland
Sunday, July 20, 2025

இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை

Must Read

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பகுதிகளுக்கும் எந்தவொரு பயணமும் மேற்கொள்ள வேண்டாம் என பிரித்தானிய அரசு தனது குடிமக்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிரிட்டனின் வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) வெளியிட்ட புதிய அறிவுறுத்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் தற்போதைய சூழ்நிலை மிக வேகமாக மாறக்கூடியதாகவும், “திடீர் அபாயங்களை உருவாக்கக்கூடியதாகவும்” இருப்பதைக் குறிப்பிடுகிறது.

“இது மேலும் விரைவாகவும் எச்சரிக்கையின்றியும் மோசமாக மாறக்கூடிய நிலைமை” என அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் விமானப்பாதை தற்போது மூடப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் இரு நாடுகளும் ஏவுகணைகளை பரஸ்பரம் செலுத்தியதால், போர்சூழல் அதிகரித்துள்ளது.

“இஸ்ரேலில் உள்ள பிரிட்டன் குடிமக்களுக்கு எனது முக்கியமான செய்தி – உங்கள் பாதுகாப்புதான் எங்கள் முக்கியத்துவம்” என X-இல் (முன்னைய Twitter) பதிவின் ஊடாக பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி, தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா தற்போது ஈரானுக்கும் எந்தவொரு பயணத்தையும் தவிர்க்குமாறு, மேலும் எச்சரிக்கையை விட்டுள்ளது.

நியூகாஸிலில் இருந்து வந்த 72 வயதான ஜேம்ஸ் ஈடன் என்ற பிரிட்டன் மூதாட்டி, ஜூன் 9ஆம் திகதி இஸ்ரேலுக்கு ஒரு ஆன்மிக பயணத்திற்காக வந்திருந்தார்.

தற்போது யெருசலேமில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தற்போது எகிப்துக்கு சென்று, அங்கிருந்து பிரிட்டனுக்கு திரும்பும் முயற்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டன் குடிமக்கள் அவ்வப்போதும் பயண அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஜூன் 12ம் திகதி இரவில், இஸ்ரேல், ஈரானில் உள்ள இராணுவ மற்றும் அணுசக்தி தொடர்பான இடங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தியது.

இதைத் தொடர்ந்து ஈரான் பதிலடியாக விமானப்படை தாக்குதல்களை நடத்தியது.

பாட் யாம் மற்றும் தாம்ரா பகுதிகள் ஈரானின் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன. மறுபக்கம், இஸ்ரேல் இராணுவம், டெஹரானில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அறிவித்துள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES