பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான முற்றுகையால் ஏற்பட்ட பட்டினி நெருக்கடி, உணவு விநியோக இடங்களில் உதவி தேடுவோர் மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல்களால் மேலும் மோசமடைந்துள்ளது.
மே மாத இறுதியில் இருந்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற GHF என்ற அமெரிக்க நிறுவனத்தால் நடத்தப்படும் உதவி விநியோக இடங்களில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்தபட்சம் 859 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மதிப்பிடுகிறது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு துயரமான அறிக்கையில், டாக்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் (Doctors Without Borders – MSF என்ற பிரெஞ்சு சுருக்கத்தால் அறியப்படுகிறது) GHF இடங்கள் “மக்கள் கூட்ட நெரிசல், மூச்சுத்திணறல், வன்முறை கொள்ளை மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் கூட்டக் கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன்” ஒத்ததாக மாறியுள்ளதாக கூறியது.
இந்த மனிதாபிமான அமைப்பு, இஸ்ரேலின் இராணுவமயமாக்கப்பட்ட உணவு விநியோகத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதை அவர்கள் “நிறுவனமயமாக்கப்பட்ட பட்டினி மற்றும் மனிதமற்ற நடவடிக்கை” என்று விவரித்தனர்.
நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

