விமானங்களில் பயணம் செய்யும் எடைகூடிய அல்லது உடற் பருமன் மிக்க பயணிகள் தொடர்பில் ஓர் விமான சேவை நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க குறைந்த செலவு விமான சேவையான சவுத்வேஸ்ட் எயர்லைன்ஸ் தனது பயணிகள் கொள்கையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
2026 ஜனவரி 27 முதல், விமான இருக்கையில் கைரெஸ்ட் (armrest) உட்பட்டுச் சௌகரியமாக அமர முடியாத பயணிகள் கூடுதல் இருக்கையை முன்கூட்டியே வாங்குவது கட்டாயமாகும்.
தற்போது, அதிக எடை கொண்ட பயணிகள் விமான நிலையத்தில் இலவசமாக கூடுதல் இருக்கை கேட்கவோ அல்லது முன்பே இரண்டாவது இருக்கை வாங்கி பின்னர் பணத்தைத் திரும்பப் பெறவோ முடியும்.
ஆனால், புதிய விதிமுறையில் பணம் திருப்பி வழங்கப்படுவது உறுதியானதல்ல. விமானம் முழுமையாக நிரம்பவில்லை என்றால், இரு டிக்கெட்டுகளும் ஒரே வகை கட்டணத்தில் வாங்கப்பட்டிருந்தால், மேலும் பயணி 90 நாட்களுக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே பணம் திருப்பி வழங்கப்படும்.
இவ்விதிமுறையுடன், சவுத்வேஸ்ட் தனது பாரம்பரியமான “முதலில் வரும் பயணியார் முதலில் இருக்கை தேர்வு செய்யும்” முறையையும் நிறுத்தி, ஒதுக்கப்பட்ட இருக்கை முறையை எதிர்வரும் 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்துகிறது.
இது, சமீபத்தில் பயணிகளுக்கான இலவச பையில் அனுமதியை ரத்து செய்த பின்னர் வரும் மற்றொரு பெரிய மாற்றமாகும்.
புதிய விதிமுறைப்படி, தேவையான கூடுதல் இருக்கையை முன்பே வாங்காத பயணிகள் விமான நிலையத்தில் கட்டாயமாக வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் முழுமையாக நிரம்பியிருந்தால், அப்பயணிகள் அடுத்த விமானத்திற்கு மாற்றப்படுவார்கள்.
பயணிகள் உரிமை ஆதரவாளர்கள் இந்த மாற்றம் அனைவரின் பயண அனுபவத்தையும் சிரமப்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த வாடிக்கையாளர்களையும் சவுத்வேஸ்ட் இழக்கும் அபாயம் உள்ளது என்று விமான நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

